வாழ்க்கை தரம்

வாழ்க்கை தரத்தை நிர்ணயிப்பது பணமாகவோ, புகழாகவோ, பதவியாகவோ இருக்கக்கூடாது..வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிப்பது மனிதாபிமானம் சார்ந்த செயல்களால் மட்டுமே இருக்க வேண்டும்.

எந்த ஒரு இடத்தில் பணத்தால் ஒருமனிதன் அங்கீகரிக்கப்படுகிறானோ , அங்கிருந்து அவன் சற்று விலகி சென்றால் அவன் வாழ்வு மகிழ்ச்சியாக மாறும். இல்லையேல் தான் அங்கீகரிக்கப்பட வேண்டும். அதற்கு நான் நல்லவனாக மட்டுமிருந்தால் போதாது .. நல்லதோ, தீயதோ எதுவென்றாலும் செய்து சீக்கிரம் பணக்காரன் ஆகிவிட வேண்டும். நானும் சமுதாயத்தால் மதிப்புள்ளவன் என அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற ஓட்டத்தை ஓடத் தயாராக வேண்டும்.

சிந்தியுங்கள் பெற்றோரே!!! உங்கள் குழந்தை சிறு வயதில் நல்லது செய்தால் எவ்வளவு பாராட்டுவீர்கள். அதுவே அக்குழந்தை வளர்ந்து சமுதாயத்தில் நல்ல மனுஷன் என்ற பெயர் மட்டும் வாங்கினால் உங்களுக்கு பெருமை தான். இல்லை என்று சொல்லவில்லை. மேலும் அக்குழந்தை வீட்டிற்கு சம்பாதித்து தராமல் பொதுச் சேவை செய்தால் கிடைக்கும் பெயர் *பிழைக்கத்தெரியாதவன்*…

இந்நிலை மாற வேண்டும்..

சுயநல எண்ணம் களையப்படவேண்டும்..

பணம் வந்துவிட்டால் எல்லாம் வந்துவிடும் என்ற தவறான எண்ணம் களையப்படவேண்டும்..

வாழ்வில் எல்லாம் போதும் என்ற நிறைவு மட்டுமே நமக்கு நிம்மதியைத் தரும். அது ஒன்றையே செய்வோம்.. நல்லதையே செய்வோம்..

வாழ்வின் தரம் பணத்தில் அல்ல குணத்தில்!!!!

Leave a comment